ஆடி முடிந்து ஆவணியும் தொடங்கி விட்டது. அம்மி பறக்கிறதோ இல்லையோ அடிக்கிற வெய்யிலில் படைப்பாற்றலாவது கிடைப்பாற்றலாவது உருண்டு திரண்டு எல்லாம் உருகுகிறது. சித்திரை,வைகாசியை மிஞ்சுமளவிற்குத் தகிக்கிறது. அப்போது வராத வேர்க்குரு இப்போது வருவதை மரு நிலத்து மலர் என எடுத்துக் கொண்டு அமைதி கொள்ள வேண்டியதுதான். அல்லது எழுத்துருகி வேனல் குருவாகி வந்தனை எனப் பாட வேண்டியதுதான்.