Sunday 30 May 2021

தோப்பில் முஹம்மது மீரான் சிறுகதைகள்-- வாசிப்புக்குப்பின்னர்

 

காலச்சுவடு பதிப்பகம் சென்ற வருடம் வெளியிட்ட கிளாசிக் வரிசை நூல்களில் ஒன்றான  தோப்பில் முஹம்மது மீரான் சிறுகதைகள் தொகுப்பை நேற்றுதான் நிறைவு செய்தேன்.

Sunday 23 May 2021

முடி திருத்தக நினைவுகள்

 


 

முடி திருத்தி இரண்டு மாதங்களாகி விட்டது. கிளர்ச்சி மன நிலையில் எல்லா முடிகளும் அடங்க மறுத்துக் கொண்டிருந்தன. ரமழான் காலத்தில் இரண்டாம் பொது முடக்கு தொடங்கியபடியால் வீட்டுக்கு வந்து வெட்டினால் எவ்வளவு என எனக்கு தெரிந்த முடி திருத்துனரிடம் கேட்டேன். இரு நூறு ரூபாய்கள் என்றார். கடையில் போய் வெட்டினால் நூறு ரூபாய்கள்தான். பஞ்சக் காலத்தை நினைத்து “ அப்படி முடி வெட்டவே வேண்டாம்” என சும்மா இருந்து விட்டேன்.

Sunday 16 May 2021

குழந்தையகராதி

 துயர்கள் இருளாய் சூழும் வேளைகளில் அந்த கறுஞ்சுழலிலிருந்து நம்மை மீட்பதில் குழந்தைகளை விட வல்லவர்கள் யார்?

என் பெயர்த்தியின் சொல்லகராதி


Saturday 15 May 2021

நல்லாசிரியர்

 

 


 

 

எனது தமிழாசிரியரும் நல்லாசிரியர் விருதாளரும்  காயல்பட்டினம் வரலாற்று ஆசிரிய ஆளுமைகளில் ஒருவருமான இப்னு ஷேகுனா ( ) அபுல் பரக்காத் (72) அவர்கள் நேற்றிரவு வெள்ளிக்கிழமை 09:30 மணியளவில் 14/05/2021 இறைவனின் பால் மீண்டு விட்டார்கள்.