அதிராம்பட்டினம் பயணத்திற்கான துணிகளை இஸ்திரி போட்டு விட்டு சாப்பிட உட்கார்ந்ததில் நிறைய தாமதமாகி விட்டது. மணி மூன்றாகி விட்டிருந்தது. வழக்கமாக வானொலியில் திருச்சிராப்பள்ளியிலிருந்து அஞ்சலாகும் மதியம் ஒன்றே முக்கால் மணிக்கான மாநிலச்செய்தி தொடங்கவும் நான் சோற்றில் கை வைக்கவுமாக சரியாக இருக்கும்.