எனது வயதில் அவருக்கு ஒரு மகள் இருந்தாலும் அவரை ஏகே காக்கா
என்றுதான் சிறு வயதில் அழைப்பதுண்டு. காலம்
இருவரையும் பழுக்க வைத்த பிறகு காக்கா என்ற
சொல்லின் போதாமையை உணர்ந்து அவரை மாமா என்று அழைக்கத் தொடங்கினேன். இந்த கதைக்காக அவரை
காக்கா என்றுதான் அவரை அழைக்கப்போகின்றேன். காரணம் இந்தக்கதையை அவர் எனக்கு காக்கா பருவத்தில்தான்
சொன்னார்.