மேடும் பள்ளமும் வளைவும் திரிவும் கொண்ட கேரளத்தில் பேருந்து பயணமென்பது தலை சுற்ற வைக்கும் ஒன்று. அதிலும் தனியார் பேருந்துகள் என்பன குடை இராட்டினமேதான். “கேறு கேறு “ என்ற நடத்துனர்களின் கூவலில் தலை கிறுகிறுப்பு தொடங்கும். நெளியும் சாலைகளில் அதன் சுழன்றாடுகையும் பாட்டுக்கூச்சலுமாக வண்டியை விட்டு இறங்கும்போது நமது ஆன்மாவிற்கும் உடலிற்கும் வேறு பிரிந்த ஒரு மோன நிலை கைகூடியிருக்கும்.