திட்டமிடப்படாத,
தோன்றிய பொழுதிலான பயணமொன்றை மேற்கொள்ள வேண்டும் என பெருந்தொற்று முடக்கு காலத்திலிருந்தே
தோன்றிக் கொண்டிருந்தது.
இவ்வருட புனித
ரமளான் மாத விடைபெறலின்பிரிவுத்துயரானது ஒரு பிய்ந்து போதலை கோரவும். வெளிக்கிளம்புவதற்கான
நெருக்கடியானது பின் வரும் நிழலாக வந்து சேர்ந்தது.
கடல் அகழியில் ஓயாது சரியும் மணல் போல மனத்திற்குள்
வெற்றிடம் குழிந்து கொண்டே இருந்தாலும் இறக்கைகள் எஞ்சும் வரை பறக்க வேண்டியதுதான்.