மும்பையில் பல்லாண்டுகள் வசிப்பவர்கள் கூட அறிந்திராத தொடர்வண்டி மரபு வழி அருங்காட்சியகம்.
மும்பை சத்திரபதி சிவாஜி இரயில் முனையத்தோடு ஒட்டித்தான் இவ்வருங்காட்சியகம் இருக்கிறது.
இந்தியாவின் முதல் இரயில் சேவை பிரிட்டிஷாரால் தொடங்கப்பட்டது தொடர்பான ஆவணங்கள், அவர்களது திட்டங்கள், கனவுகள், அர்ப்பணிப்புகள் என அனைத்துமே இந்தியாவில் மற்ற இடங்களில் காணக்கிடைக்காத புகைப்படங்கள், ஓவியங்களுடன் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.