சென்னை புத்தகக் கண்காட்சி2022 தொடங்கி பத்து நாட்கள் கழித்தே செல்ல முடிந்தது. மொத்த அரங்கையும் சுற்றி வந்தேன். எழுத்தாளர் அ.முத்து கிருஷ்ணன், பதிப்பாளர் பரிசல் செந்தில் நாதன் ஆகியோரை சந்திக்க முடிந்தது.
அவர் கேமிராவைப் பார்க்க கேமிரா அவரைப்பார்க்க உயிர்மை அரங்கின் வெளியே மனுஷ்ய புத்திரன் அமர்ந்திருந்தார். எஸ்.இராமகிருஷ்ணனும் தன் தேசாந்திரி அரங்கிற்கு வெளியே அமர்ந்திருந்தார். எழுதினோமா அடுத்ததை எழுதுவோமே என்றில்லாமல் எற்கனவே ஆக்கிய சோற்றை சுமந்து கூவுவது என்பது படைப்பாளிக்கு கூடுதல் பாரம்தான்.