‘கசபத்' காயல்பட்டினத் தமிழிலான அழகிய சுயசரிதை
நாவல். காயல்பட்டினத்தின் தமிழ் புதிதாக கேட்பவர்களுக்கு புதுமையாகவும், இனிமையாகும்
இருக்கும். அது இந்த நாவல் முழுக்க விரவிக் கிடக்கிறது. நாவலை படித்து முடிக்கும்போது
நம் நாவும் அந்த வட்டார மொழியை உச்சரிக்கத் தவறாது. நாவலாசிரியர் சாளை பசீரின் ஊர் காயல் பட்டினம்.
அவரைச் சுற்றி நடந்த சுமார் நான்கு வருட நிகழ்வுகளை அற்புதமாக விவரித்திருக்கிறார்
என்பதை விட காட்சிப்படுத்தி இருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.