என் பெயரனுக்கு இது அது என்றெல்லாம் இல்லை. எல்லாம் விளையாட்டுப் பொருட்கள்தான். சமையல் கலன்களை எடுத்து விளையாடிக் கொண்டிருந்தவன் ஒரு கட்டத்தில் அதை தன் தலையில் கவிழ்த்துப் பார்த்தான்.
அனைவருக்கும் ஈகைத்திருநாள் வாழ்த்துகள்!!
எனது திருவனந்தபுரப் பயணங்கள் பெரும்பாலும் வானொலி நிலைய
கதை சொல்லலுக்காகவே அண்மை வருடங்களாக நடைபெறுகின்றன.
மின்சாரமில்லாத மழை இரவுகளில் பேசுவதையும் கேட்பதையும் தவிர வேறெதையும் செய்ய முடியாது. அப்படியானதொரு இரவில்தான் ஆடறுத்து இரத்தத்தைத் துணியில் நனைத்து அசைத்து இரயிலை நிறுத்தியக் கதையைச் சொன்னாள் என் றாத்தா.அது மீச்சிறு கதையாக இருந்ததால் அவள் நெடுந்தொடரொன்றை சொல்லத் தொடங்கினாள்.ஜின் வசிய வீட்டுக்காரிகளைப்பற்றியது.அவ்விரவில் அரிக்கேன் லாந்தர்களின் அலையும் வெளிச்சப் படலுடன் சுவர் கடிகையின் ‘டிக்’ ஒலியும் மட்டும் இல்லாதிருந்தால் அந்த இருளால் இவ்வளவு மட்டுக்கும் வீட்டுக்குள் அலைந்திருக்க முடியாதுதான்.