Friday, 4 September 2026
Wednesday, 2 September 2026
புத்தகக் கிராமம்
புத்தகங்கள் எண்ணிறந்த உலகங்களைக் கட்டியிழுத்து நம்முள் கொண்டு வருபவைதான். புத்தகங்களை வாங்குவதற்கான மெனக்கெடல் என்பது ஒரு திறன்பேசி திரைத் தடவலில் முடிந்து விடுவதால் ஏற்கனவே புத்தகங்களுக்காக நடந்த மெனக்கெடல்களுடன் சிறு பயணங்களும் தேவையற்றதாகி விட்டிருக்கின்றன.
Friday, 14 August 2026
சூடு இறக்கம்
ஆடி முடிந்து ஆவணியும் தொடங்கி விட்டது. அம்மி பறக்கிறதோ இல்லையோ அடிக்கிற வெய்யிலில் படைப்பாற்றலாவது கிடைப்பாற்றலாவது உருண்டு திரண்டு எல்லாம் உருகுகிறது. சித்திரை,வைகாசியை மிஞ்சுமளவிற்குத் தகிக்கிறது. அப்போது வராத வேர்க்குரு இப்போது வருவதை மரு நிலத்து மலர் என எடுத்துக் கொண்டு அமைதி கொள்ள வேண்டியதுதான். அல்லது எழுத்துருகி வேனல் குருவாகி வந்தனை எனப் பாட வேண்டியதுதான்.
Tuesday, 21 July 2026
அனல் வாயில்
தோல் பையிலுள்ள துணிப் பந்தையெடுத்துக் கை விரல்களின் இண்டு இடுக்குகளையும் நகக்கண்களையும் கூர்த்தவாறே நிதானமாக அழுத்தித் துடைத்தார். விரல்களிலிருந்து கண்களை விலக்காமலேயே சொன்னார் “ இது எல்லாத்துக்கும் வர்ற வாய்வு புடிப்புதான். பயப்புடறதுக்கு ஒன்னுமில்ல. ஆனா ஒங்களுக்கு வந்த மாதிரி வேற யாருக்கும் வந்து நான் பாத்ததில்ல. வெந்நில ஒத்தடம் வச்ச பொறவு மூணு சொட்டு தைலத்த எடுத்து ராத்திரிக்கும் பகலய்க்கும் தேய்ச்சுட்டு வாங்க. வலி இருந்தா மட்டும் திங்க கிழம கடப்பக்கம் வாங்க…. ”. முந்நூறு ரூபாய்களை வாங்கிக் கொண்டுக் கிளம்பினார் பண்டாரவிளைக்காரர்.
Wednesday, 15 July 2026
"ஸ்நேஹம் நிறஞ்ச வாழச்செடியின தெய்வம் காத்தல்லோ"
"ஸ்நேஹம் நிறஞ்ச வாழச்செடியின தெய்வம் காத்தல்லோ"
(அன்பு நிறைந்த வாழைக்கன்றை தெய்வம் காத்ததே)Tuesday, 14 July 2026
கொடிக்கால் மாமா -- முக்கால் நூற்றாண்டுக் கால பெருந்தடம்
பொதுவாக இரவுறக்கத்திற்கு முன் நான்
செல்பேசியை அணைப்பதுண்டு. அன்று நான் படுப்பதற்கு சற்றுத்
தாமதம். வாட்சப்பில் நாகப்பட்டின சட்டமன்ற உறுப்பினரும் நண்பருமான
பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அழைத்தார். நெடுநாள் நட்பென்றாலும்
அபூர்வமாகத்தான் சந்திப்போ அல்லது தொலைபேசி வழி உரையாடலோ நடக்கும்.
Monday, 6 July 2026
கேசவர்
“
“கத்திரியே
கத்திரியின் இரு ஓரங்களிலும்