பொதுவாக இரவுறக்கத்திற்கு முன் நான்
செல்பேசியை அணைப்பதுண்டு. அன்று நான் படுப்பதற்கு சற்றுத்
தாமதம். வாட்சப்பில் நாகப்பட்டின சட்டமன்ற உறுப்பினரும் நண்பருமான
பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அழைத்தார். நெடுநாள் நட்பென்றாலும்
அபூர்வமாகத்தான் சந்திப்போ அல்லது தொலைபேசி வழி உரையாடலோ நடக்கும்.
