கதிரவனின்
எழுதலுக்கும் விழுதலுக்கும் இடைப்பட்ட ஒரு
அன்றாடமானது இடைவிடாமல் நம்மிடம் வரும்போது அதுவே ஒரு தேய் நாளாகி விடுகின்றது.
சலிப்பும் சோர்வும் மனிதனை அலைக்கழிக்கின்றன.
நம்மிடம் அன்றாடம் இருந்து வரும் உடல் நலம், மன நலம், பொருள் நலம் உள்ளிட்ட வாழ்க்கைப்பேறுகளை
ஏதாவது கெடு நிகழ்வோ விபத்தோ சிதைத்து விடும்
வரைக்கும் சராசரி நாளின் அருமை பெருமையை நாம் உணர்வதில்லை.