Saturday, 29 February 2020

தில்லி படுகொலைகள் சொல்லும் செய்தி


குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றிற்கு எதிராக  நாடு முழுக்க போராடுவோரை இந்த படுகொலைகள் வாயிலாக  ஃபாஸிச அரசு அச்சுறுத்துகின்றது.
வன்முறையை நம் மீது திணித்து

Sunday, 23 February 2020

ஏ.எல்.எஸ்.மாமாவின் சேகரம்


நீ மெல்லச்சாகின்றாய் – பாப்லோ நெரூதா






நீ பயணிக்காதபோது
நீ வாசிக்காதபோது
வாழ்வின் இசையை
நீ  செவிமடுக்காதபோது
உன்னை நீயே
பாராட்டிக் கொள்ளாதபோது
நீ மெல்லச்சாகின்றாய்

Sunday, 16 February 2020

கூனன் தோப்பு





எழுத்தாளர் தோப்பில் முஹம்மது மீரான் அவர்களை சந்திக்கும்போதும் அவரது ஒவ்வொரு நாவல்களையும் எனக்கு பரிசளிப்பார்.அப்படியான அன்பின் கனியாக எனக்கு கிடைத்த கூனன் தோப்பு ( அடையாளம் வெளியீடு)   புதினத்தை நேற்றிரவுதான் வாசித்து முடித்தேன்.

நாங்கள் வாழ்வதை வைத்து மதிப்பிடுங்கள். த்வீபா – கன்னடத்திரைப்படம்







கன்னட எழுத்தாளர் நாபட் டிஸவ்ஸாவின் நாவலான ‘ த்வீபா “( தீவு ) வை தழுவி கன்னட சினிமாவின்  புதிய அலை இயக்கத்தின் முன்னோடியான பத்மசிறீ கிரீஷ் கசரவள்ளியால் இயக்கப்பட்டு 2002 ஆம் ஆண்டு வெளிவந்தது. இதன் திரைக்கதையையும் நாபட் டிஸவ்ஸாவே எழுதியுள்ளார்.

வளர்ச்சியின் பெயரால் தாங்கள் பிறந்த நிலத்திலிருந்து மக்கள் பிடுங்கி எறியப்படுவதன் வலி , குடும்பத்திற்குள் பெண்கள் சுவைக்கும் பிரிவுத்துயர் , அங்கீகாரமின்மை, மென் தீண்டாமை , ஒடுக்கப்படும் மனிதருக்குள்ளும் ஒளிந்திருக்கும் குரூரம், நம்பிக்கைகளின் முரண் என பல கிளைகளாக கதை ஊற்றெடுக்கின்றது.

Thursday, 13 February 2020

பன்மய வானொலி -- பிப்ரவரி 13, 2020 உலக வானொலி தினம்



எனது உம்மா வீட்டில் இருந்த பிலிப்ஸ் வால்வ் வானொலியின் விசையை திருப்பியவுடன் இன்றைய டிரான்ஸிஸ்டர் வானொலிப்பேழையை போல உடனே குரல் வராது. இடது ஓரத்தில்  நெற்றித்திலகம் போல பச்சை விளக்கு மெல்ல உயரும் வரை பொறுமையாக காத்திருக்க வேண்டும்.வால்வ் சூடாக வேண்டும்.

Monday, 10 February 2020

எல்லாம் கறுமை – மூவர் நினைவேந்தல்



எனது வலைப்பூவின் முகப்பில் சிறு திருத்தம் ஒன்றை செய்வதற்காக இலங்கை நண்பர் இன்ஸாஃப் ஸலாஹூத்தீனுக்கு புலன ஒலிக்குறிப்பொன்றை (வட்ஸப்) வைத்தேன். அவரிடமிருந்து மறுமொழி வந்தது. திறந்து கேட்டேன். ஊர் திரும்பும் ஒரு பயணத்தின் நடுவிலிருந்து பேசியிருந்தார். அவரது மச்சான் அதாவது தந்தை வழி அத்தையின் மகன், அருகிலுள்ள அணைக்கட்டுக்கு நண்பர்களுடன் நால்வராக குளிக்கப் போயிருக்கின்றனர். நீர்ச் சுழலுக்குள் இறப்பின் வாயில் திறந்திருக்கின்றது. இருவர் தப்பி விட மச்சானும் மற்றொரு நண்பரும் சிக்கி விட்டனர்.

ஜய்ப்பூர் - ராஜஸ்தான்

18/10/2015




Saturday, 1 February 2020

நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல் --- ஓட்டமாவடி அறபாத்தின் நூல்


போர்ப்படலம் நீங்கிய ஒரு தேசத்து மைந்தனின் வாழ்க்கை கணக்கு. நாட்காட்டிகள் அவற்றை பழங்கணக்காக மாற்றிய போதிலும் சொட்டிய உயிர்த்துளிகளினால் நனைந்திருக்கும்  நினைவுகளுக்கு அவை எப்போதும் புத்தன் கணக்குதான்.

வைகறை ஹோமியோ மருத்துவமனை





எனக்கு தேவையான மருந்து பொட்டலங்களை வாங்கி விட்டு திருநெல்வேலிக்கு அடுத்த பேருந்து எத்தனை மணிக்கு? என செயலிட முகப்பில் ( கவுண்டர் ) இருந்தவரிடம் கேட்டேன்.


" சார்! இங்கே பஸ் நிக்குறது கொறவு. வழமையா பேஷண்டுகளை தருவைக்கு கார்ல கொண்டு விடுவோம். அங்க எல்லா பஸ்ஸும் நிக்கும்.  வெள்ளிக்கிழமை மட்டும் கார் வெளியே போய்டும். ஒன்னும் பிரச்ன இல்ல, ஆட்டோ ஏற்பாடு பண்றோம்”