Saturday, 31 May 2025

ரிஹ்லா சரந்தீப் - பாவா ஆதமின் பாத காணி – 5

 பேருவளை மருதானைக்கரையிலிருந்து  இந்தியப்பெருங்கடலில் கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் தொலைவில்  உள்ள குட்டித் தீவு.

காண்பதற்கு  தென்னந்தீவாக காட்சியளிக்கும் பேருவளைத் தீவு. காலனியாதிக்கவாதிகளால் பர்பரின் தீவு என்றும் வரலாற்றின் ஏடுகளில்  வெல்மடுவா,காக்கைத்தீவு,என்றும் அழைக்கப்படும் நிலத்திட்டு. உள்ளூர்க்காரர்கள் கலங்கரை விளக்கம். எனும் பெயரைக் கொண்டே  இத்தீவை அழைக்கிறார்கள்.

Tuesday, 20 May 2025

பத்ம சிறீ முராய்து கண்டவ்ரு அலீ மனிக்ஃபான்

முப்பது வருடங்களாகப் பழக்கம். அன்னாருக்கு எண்பத்தேழு வயதாகிறது.பலரின் உடல் நடை பாவனை எல்லாவற்றையும் வயது துணியை சுருட்டுவது போல தன் கரங்களுக்குள் சுருட்டிக் கொள்ளும்.

Friday, 9 May 2025

ரிஹ்லா துளுநாடு -- மொழிகளின் நிலம் 3

கேரள மாநிலம் கொண்டோட்டி மாப்பிளா கலா அகாடமி மொக்ரால் கிளையின் சார்பாக மொக்ரால் பள்ளிக்கூடத்தில் சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். ஞாயிற்றுக்கிழமை திருமண நிகழ்வுகளும் பொது நிகழ்வுகளும்  நிறைந்த நாள் என்ற போதிலும் தொலைவிலிருந்து வரும் எங்களுக்காக துரித ஏற்பாடொன்றைச் செய்திருந்தனர் மொக்ரால் வாசிகள்.

ரிஹ்லா துளுநாடு --- மங்களூரு ஜீனத் பக்ஸ் பள்ளிவாயில் ஒளிப்படங்கள்

 


Thursday, 8 May 2025

ரிஹ்லா துளுநாடு -- மொழிகளின் நிலம் 2

வரலாற்றுப் பேராசிரியர் ஹஸனால் இரண்டாம் நாள்தான் எங்களுடன் வந்திணைய முடிந்தது. அவர் வந்து சேர்ந்து குளியல் செயல்பாடுகளை முடித்தபின் தங்கியிருந்த விடுதியின் கணக்கை தீர்த்து விட்டு மங்களுருவிலுள்ள உள்ள கர்நாடக பியாரி சாஹித்ய அகாதமி அலுவலகத்திற்குச் சென்றோம்

ரிஹ்லா துளுநாடு -- மொழிகளின் நிலம் 1

முப்பது வருடங்களுக்கும் மேலாக வட கேரளத்துக்குத் தொடர்வண்டியில் பயணிக்க நேரும்போதெல்லாம் தவறாமல் கேட்டு வரும் ‘மங்களாபுரம்’ எனக் கேரளியர்களால் செல்லமாக அழைக்கப்படும் ‘மங்களூர்’ நகரம்.  கடைசியெழுத்தான ‘ர்’ ஐ உருட்டி இப்பொழுது ‘மங்களூரு’வாகவிருக்கும் மங்களூரை இரு முறைக் கடந்து போக நேரிட்டிருக்கிறதேத் தவிர இறங்கிக் காலாறும் வாய்ப்புக் கிடைத்ததில்லை.

ரிஹ்லா துளுநாடு -- சுல்தான் பத்தேரி ஒளிப்படங்கள்