Tuesday, 27 April 2021

இயக்குநர் தாமிரா ( எ ) காதர் மொஹிதீன்


 

பெருந்தொற்று கொரோனாவினால் இன்று  காலஞ்சென்ற   நண்பரும் திரைப்பட இயக்குநருமான   தாமிரா ( எ )  காதர் மொஹிதீன்  எங்கள் திருநெல்வேலி சீமைக்காரர். இரண்டரை வயது மூத்தவரும்  கூட.

Monday, 19 April 2021

தஹ்ரீக்குல் முஜாஹிதீன் சையத் அஹ்மத் ஷஹீத் – முதல் பாகம். நூல் பார்வை

 

 

தென்னிந்தியாவில் போர்த்துக்கீசிய  டச்சு காலனியாதிக்கத்திற்கெதிரான  குஞ்ஞாலி மரைக்காயர்களின் போராட்டத் தொடர்ச்சி,  ஆங்கிலேயருக்கெதிரான ஹைதர், திப்புவின்  போராட்டம் ஆகியவை முடிவிற்கு வரும் காலகட்டத்தில் இந்திய துணைக்கண்டத்தின்  வடபுலத்தில்  அடங்க மறுத்தலின் குரலொன்று  எழுகின்றது.


Friday, 16 April 2021

உண்ண மறுத்த குதிரை

 


எனது பேத்தி உம்முல் ஹைரிய்யாவிற்கு அவளது வாப்பா மின்கலனில் இயங்கும்  குதிரையொன்றை வாங்கி வந்துள்ளார்.  செவிகளில் உள்ள விசையை அழுத்தினால் வாலை மேலுங்கீழுமாக ஆட்டிக் கொண்டே அது பாடும். தன் குரலில் அல்ல, மனிதர்களின் குரலில்தான்.

நமது நீட்சி

 



Tuesday, 6 April 2021

இறுதி நபியின் வாழ்வில் இறை நினைவும் பிரார்த்தனையும் – நூல் பார்வை





நூல்: இறுதி நபியின் வாழ்வில்  இறை நினைவும் பிரார்த்தனையும்

ஆசிரியர்: முஹம்மது அல் கஸ்ஸாலி

அரபியிலிருந்து தமிழாக்கம்: முனைவர் பீ.எம்.எம்.இர்ஃபான்

பதிப்பகம்:  சீர்மை, சென்னை. தொடர்பெண்: 8072123326

 

--------------------

 

“சாளரங்களும் அறைகளும் ஒளியினால் ஒளிர்கின்றன என்றால் அதற்கு காரணம் மேலே ஒளிர்ந்து கொண்டிருக்கின்ற கதிரவனின் ஒளியே என்று கருது.