Friday, 2 January 2026
பொருநை அருங்காட்சியகம் -- அரை நாள் ரிஹ்லா#3
நான்கு நாட்களுக்கு முன்பு முடிவு செய்யப்பட்டு ரிஹ்லா சமூக ஊடகக் கணக்கில் அறிவித்தோம்.மூச்சில்லை.
அரை நாள்
ரிஹ்லாக்களுக்கென நேர்ந்து விடப்பட்ட இருவர்(என்னுடன் ஏர்வாடி காதர் மீறான்) ‘ததும்பும்
தமிழ்ப்பெருமிதம்’ நோக்கிக் கிளம்பினோம்.பொருநை அருங்காட்சியகத்தின் இலச்சினைஸ் சொல்
‘ததும்பும் தமிழ்ப் பெருமிதம்.’
Wednesday, 24 December 2025
கசபத் தரும் வாழ்வியல் பாடம்
23/12/2025 யாவரும்.காம் இணைய சஞ்சிகையில் முகமது இப்றாகிம் அலி எழுதியது.
| முகமது இப்றாஹிம் அலி |
Thursday, 18 December 2025
“சட்டகங்களுக்கப்பால் வாசிப்பு” – --- மேல்விசாரம் சி.அப்துல் ஹக்கீம் கல்லூரியின் வரலாற்றுத் துறையில்01/12/2025 அன்று ஆற்றிய உரை
எல்லோருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்/முகமன்கள்!
இந்த பொன்னரிய வாய்ப்பை நல்கிய
எல்லாம் வல்ல இறைவனைத் துதிப்பதோடு கல்லூரி நிர்வாகத்தினருக்கும் வரலாற்றுத்துறையின்
பேராசிரியத் தோழமைகளுக்கும் தோழரும் பேராசிரியருமான முஹம்மது ஹஸன் அவர்களுக்கும் எனது
நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
Wednesday, 26 November 2025
பித்தளைத்துட்டு
1
இரு பத்தாண்டுகளாக எனது தெருவில் பல இடங்களிலும் அவரைப்பார்த்திருக்கிறேன்.
உம்மா வாப்பா இட்ட பெயர் ஷேக் அப்துல் காதிர். ஒத்த வயதுக்காரர்களால் ‘சேத்துக்காரு’
என செல்லமாக அழைக்கப்படுபவர். ‘பித்தளைப்பூட்டு’ என்பதுதான் அவரது விளிப்பெயராக இருந்திருக்க வேண்டும். அது
ஏன் பித்தாளப்பூட்டாக திரிந்தது என்பதற்கு கூடுதல் விளக்கம் தேவைப்படாவிட்டாலும் அந்த
பெயர் ஏன் வந்தது? என்பதற்கான விளக்கம் எனக்குத் தெரியாது. நானும் அதற்காக மெனக் கெடவுமில்லை.
Monday, 20 October 2025
An Evening Train in Central Sri Lanka
Saturday, 18 October 2025
அன்றாடங்களின் கண்டடைதல்கள் --- 2
காஞ்சங்காட்டிலிருந்து அன்றிரவு கோழிக்கோடு வந்தடைந்தோம். அங்குள்ள இஸ்லாமியக் கல்லூரியொன்றில் இரவு தங்கல். அதன் ஆய்வு மாணவர்களுடன் ஒரு கலந்துரையாடலும் நடந்தது. கோழிக்கோட்டின் அலைச்சலும் அயர்வும் மிக்க மறு நாள் பகலிலிருந்து கிடைத்த ஓய்வென்பது கோட்டயத்திற்கான தொடர்வண்டியில் ஏறிய பிறகுதான்.
