Monday, 20 October 2025

An Evening Train in Central Sri Lanka


ஆங்கிலத்தில் கவிதை எழுதியவர் : எம்.நவ்ஷாத்

தமிழாக்கம்: ஆஷிர் முஹம்மத்

குரல்:சாளை பஷீர்

---------------------------

Saturday, 18 October 2025

அன்றாடங்களின் கண்டடைதல்கள் --- 2

 காஞ்சங்காட்டிலிருந்து அன்றிரவு கோழிக்கோடு வந்தடைந்தோம். அங்குள்ள இஸ்லாமியக் கல்லூரியொன்றில் இரவு தங்கல். அதன் ஆய்வு மாணவர்களுடன் ஒரு கலந்துரையாடலும் நடந்தது. கோழிக்கோட்டின் அலைச்சலும் அயர்வும் மிக்க மறு நாள் பகலிலிருந்து கிடைத்த ஓய்வென்பது கோட்டயத்திற்கான தொடர்வண்டியில் ஏறிய பிறகுதான்.

Tuesday, 14 October 2025

அன்றாடங்களில் கண்டடைதல்கள் --- 1

 காலை உடற்பயிற்சி நேரங்களில் துணைக்கு இருக்கும் வானொலியில் ஒலித்த அந்த நேர்காணலும் அப்பெயருமே இப்பயணச்சரட்டின் தலையாகியது.

கேரளத்தின் காசர்கோடு மாவட்டம்  காஞ்சங்காட்டின் உலகம் காண் மனிதராகிய சி.முஹம்மது குஞ்ஞுக்கா தனது வானொலி நேர்காணலில் சொன்ன வரிகள் ஈர்ப்பு விசைக் கொண்டவை.

“நான் இதுகாறும்  நாற்பது நாடுகள் வரை பயணித்திருக்கிறேன். இரஷியா,ஸ்பெயின் உள்ளிட்ட இன்னும் கொஞ்சம் நாடுகளுக்கு போக வேண்டும்.எனக்கு கொஞ்சம் நிலங்களுண்டு.அவற்றை விற்று விட்டு செல்வேன்.”


Thursday, 9 October 2025

முப்பத்தியோரு ஆண்டுகளுக்குப் பிறகு

 

னக்கு திருமணத்தில் அணிவிக்கப்பட்ட வெள்ளி மோதிரத்தை ஒரு மாதத்திற்குள்ளேயே வெளியூர் பயணம் ஒன்றில் சில கனவான்களிடம் பறி கொடுக்க நேர்ந்தது.

Wednesday, 3 September 2025

பயணம்# 07ரிஹ்லா சிறுவாணி தங்கல் -- நினைவுக்குறிப்புகள் – 3. ரிஹ்லா சிறுவாணி தங்கலுக்கு அப்பால் …..


 

 ஏற்பாட்டாளர்கள் என்ற முறையில் நானும் உவைஸும் ஒரு நாள் முன்னதாகவே நிகழ்விடமான சத் தர்ஷன் இருக்கும் அட்டப்பாடிஅகழிப் பகுதிக்கு சென்று விட்டோம். ஒரு நாள் முழுவதுமாக கையிலிருப்பதால் அதைத் தொல்குடி பகுதிகளை பார்வையிடுவதில் செலவிடலாம் எனத் தீர்மானமாகியது.

எனக்கு தனிப்பட்ட முறையில் அட்டப்பாடி தொல்குடி பகுதிகளுக்கு போவதென்பது கிட்டத்தட்ட பதினொரு ஆண்டு கனவு. முன்னணி ஆவணப்பட செயற்பாட்டாளரும் நண்பருமான ஆர்.பி.அமுதன் சென்னையில் நடத்திய ஆவணப்பட விழாவில் The Red Data Book: An Appendix என்றதொரு ஆவணப்படத்தை காண நேர்ந்தது. அதைப் பார்த்த பிறகு சில நாட்கள் மனத்தில் சமநிலை இல்லை.

(காண்க: வாழ்வின் நிறம் கறுப்பு https://salaibasheer.blogspot.com/search?q=red+data).

Wednesday, 6 August 2025

நிலத்து மழை

 “குயில்கள் போனாலும் அவற்றின் குரல்கள்  நிரந்தரமானவை.”பாடலையும் பறத்தலையும் பஞ்சின் கனம் போலக் காட்டும் எடை மயக்கம் கொண்ட வரிகள்.

An Evening Train in Central Sri Lanka