Wednesday, 29 January 2025

சங்கு சாமான் -- பத்திக் கதை

 


ஹூசைனுக்கு மாணிக்கக்கல் தரகுதான் தொழில்.அவன் வாப்பாவுக்கும் அதுதான் தொழில்.

அவனுக்கு கல் நோட்டம் பெரிதாக தெரியாது. வாப்பாவும் மகனும் தனித்தனியாக தொழில் பார்த்தாலும் அவ்வப்போது தரகிலும் நயம் விலைக்கு  வரும் கல்லை வாங்குவதிலும் பங்கு சேர்ந்துக் கொள்வர்.

Tuesday, 21 January 2025

அலைதலே நிலைத்தலுமாம் – சாளை பஷீரின் ‘கசபத்’ நாவலை முன்வைத்து - ஜார்ஜ் ஜோசப்

 காயல்பட்டினமும் அதன் கடற்கரை மணலும் வெப்பக் காற்றும் இரவின் குளிர்மையும் அங்கு வாழும் மக்களும் அவர்தம் சமய நம்பிக்கைகளும் அவர்களைப் பிணைக்கும் பள்ளிவாசல்களும் அவ்வப்போதைய பயணங்களும் வாசிப்பும் அபூவுக்குப் போதுமானதாக இருக்கின்றன. ஒவ்வொருவனும் சம்பாத்திய வாழ்வின் பின் ஓடித்தான் ஆக வேண்டுமாஎன் பூமி அதற்காகப் படைக்கப்பட்ட ஒன்றன்று என உறுதியாக இருக்கிறான்ஆனால் அப்பாவின் வியாபார வீழ்ச்சியும் சமூகத்தின் எள்ளல் பேச்சுகளும் அறிவுரைகளும் அவனைப் பொருளீட்டு எனத் துரத்துகின்றன. தான் அமர்ந்து வாசிக்கும் நூலகபடியையும், கடலின் நீலத்துடன் அமையாது பேசிக்கொண்டிருக்கும் அலைகளையும் விட்டு விரட்டப்படுகிறான் அபூ.

Thursday, 16 January 2025

ஒளியின் பட்டவர்த்தனங்களில் மறைந்திருக்கும் ரூபங்கள் - பெருநெஞ்சன் நூல் மதிப்புரை

 

சென்னை புத்தகக்காட்சி2025 ஐ முடித்து விட்டு ஊருக்கு வண்டியேறுவதற்காக உறவினர் இடத்தில் காத்திருந்தேன். அங்கு என்னை உபசரித்து உரையாடிக்கொண்டிருந்த விசைப்பொறிஞர், தன்னுடைய குடும்ப துயரங்களைப்பற்றி விவரித்து விட்டு நிறைவில் கண்ணீர் முட்டியவாறு இவ்வாறு சொன்னார்: “இறைவன் உன்னை நேசிக்கிறான். உன்னோடு நெருக்கமாக இருக்கிறான். அதனால்தான் உனக்கு இவ்வளவு சோதனைகள் என  எனது துயரங்களுக்கு ஆறுதல் சொல்லி என்னைத்தேற்றுகிறார்கள். இறைவன் நெருக்கமாக இருந்தால் மகிழ்ச்சியை அல்லவா நான் உணர வேண்டும்? ஆனால் மாற்றமாக அல்லவா நடக்கிறது?. எனவே இறைவன் சற்று தொலைவிலிருந்தால் நல்லதோ என எனக்குத் தோன்றுகிறது”.

அவருக்கு சொல்லப்படும் ஆழ்ந்த ஆறுதல் எதுவும் அவரை இன்னும் கீழே தள்ளிடுமோ என்ற அச்சமிருந்ததால் எளிய  ஆறுதலை மட்டும் கைமாறி விட்டு  ஜார்ஜ் ஜோசப்பின் பெரு நெஞ்சன் சிறுகதை தொகுப்போடு ஊருக்கு வண்டியேறினேன்.