Sunday 17 November 2019

எக்மோரீ




சென்னை மாம்பலத்திலிருந்து எழும்பூருக்கு மின் தொடர் வண்டியில் வந்து கொண்டிருந்தேன்.

எழும்பூர் நிலையத்திற்குள் வண்டி நுழைந்ததும் இறங்குவதற்காக வாசல் பக்கம் போனபோது நிலையத்தின் பெயர் பலகையை பார்த்து விட்டு எக்மோரீ ( EGMORE )என வாசித்தார்கள் எனது வலது பக்கம் நின்றிருந்த இரண்டு இளைஞர்கள்.

மெதுவாக அவர்களிடம் நீங்கள் எந்த ஊர் ? என்றேன். மஹாராஷ்டிர மாநிலம் புனேயாம். இங்கு கடற்படையில் பணிபுரிகின்றனர்

எனது இடப்புறம் நின்றிருந்த இளைஞனொருவன் சென்னை எக்மோர் இறங்கனும் என்றான். இதுதான் சென்னை எக்மோர் என்று நான் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அவனும் பெயர்ப்பலகையை பார்த்து விட்டு எக்மோரீ என்றான்.

தம்பி தமிழன்தான். திருநெல்வேலிக்கு போகிறானாம்.

No comments:

Post a Comment