ஆங்கிலத்தில் கவிதை எழுதியவர் : எம்.நவ்ஷாத்
தமிழாக்கம்: ஆஷிர் முஹம்மத்
குரல்:சாளை பஷீர்
---------------------------
காஞ்சங்காட்டிலிருந்து புறப்பட்டுக் கோழிக்கோடு வந்தடைந்தோம். அங்குள்ள இஸ்லாமியக் கல்லூரியொன்றில் இரவு தங்கல். அதன் ஆய்வு மாணவர்களுடன் ஒரு கலந்துரையாடலும் நடந்தது. கோழிக்கோட்டின் அலைச்சலும் அயர்வும் மிக்க மறு நாள் பகலுக்குப்பிறகுக் கிட்டிய ஓய்வென்பது கோட்டயத்திற்கான தொடர்வண்டியில் ஏறிய பிறகுதான்.