அறைக்குள் வந்திருக்கும் அருவி
சென்னை மழையானது சாலையில் வீழ்வது ஒரு பங்கு என்றால்
என் அறைக்கும் பக்கத்து கட்டிடத்திற்குமான ஆளற்ற இடை வெளியில் அருவியின் ஓசைதான்.
சிறு தூறல் விழுந்தாலே மொட்டை மாடியின் நீரெல்லாம்
ஒன்றிணைந்து பெரும் ஓசையுடன் மழை விட்ட பல மணித்துளிகளுக்கு நீடிக்கின்றது.
குறைந்த வீழ்ச்சியில் நிறைந்த ஒலி விளைவு.
ஆஹா.....
No comments:
Post a Comment