'செப்புக்கிடாரம்' என்ற சொல் ஏறத்தாழ 45 ஆண்டுகளுக்குப் பிறகு புலன்களுக்கு இடையே மீண்டிருக்கிறது.
என்னுடைய பதினோராவது வயதில் பொன் சிவப்பு நிறங் கொண்ட தூண் என நினைவு. 'தாமிரபட்டணம்' நாவலின் அட்டைப்படமாக அது இருந்தது. புரிந்தும் புரியாததுமான வயதில் மதிய மாலை வெளிச்ச படலத்தில் அதை படித்து முடித்தேன்.