Monday, 20 May 2024

தாமிரப்பட்டணம் நாவல் -- சீர்மை வெளியீடு

 


'செப்புக்கிடாரம்' என்ற சொல் ஏறத்தாழ 45 ஆண்டுகளுக்குப் பிறகு புலன்களுக்கு இடையே மீண்டிருக்கிறது.
என்னுடைய பதினோராவது வயதில் பொன் சிவப்பு நிறங் கொண்ட தூண் என நினைவு. 'தாமிரபட்டணம்' நாவலின் அட்டைப்படமாக அது இருந்தது. புரிந்தும் புரியாததுமான வயதில் மதிய மாலை வெளிச்ச படலத்தில் அதை படித்து முடித்தேன்.

Friday, 17 May 2024

திருச்சிராப்பள்ளி -- நகரமற்ற நகரம்

 

சென்னை புத்தகக் கண்காட்சி2024 யின் வேலைகளுக்கு நடுவேதான் அவ்வழைப்பு வந்தது.அழைத்தவர் தொல்லியல் துறை மாணவரும் இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பின் (எஸ் அய் ஓ) மாநிலக் கல்வி வளாக பொறுப்பாளருமான ரஹ்மத்துல்லாஹ்.

திருச்சிராப்பள்ளி இனாம்குளத்தூரில் உள்ள அஸ்ஸலாம் இஸ்லாமியக்கல்லூரியில் களம் வாசிப்பு வட்டம் ஒருங்கிணைக்கும் மாதாந்திரக் கருத்தரங்கில் ஜனவரி மாதம் பயண இலக்கியம் குறித்து ஒரு மணி நேரம் உரையாடவியலுமா? எனக் கேட்டார்.